Sale Date Ended
கனவு மெய்ப்படஉதவுகிறது, இன்னோவேடிவ் நிறுவனம்!*
*“ந*ல்ல திறமைகள் இருந்தும், சரியான வழிகாட்டல் இல்லாமலும், ஆலோசனை கேட்க ஆட்கள் இல்லாததாலும், தகுதியான இடத்தை அடையாமல் இருக்கிறார்கள் பலர். இவர்களின் கனவுகளை அடையாளம் கண்டு இலக்கை அடைய உதவுவதே எங்கள் பணி!’’
‘கனவு மெய்ப்பட..!’ என்பது ஒரு மூன்று மணி நேர அனுபவப் பகிர்வு மற்றும் ஆலோசனை நிகழ்ச்சி. பல்துறை வெற்றியாளர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதோடு இளைய தலைமுறைக்கு, ஆலோசனை வழங்கும் அற்புத வாய்ப்பு.
காலை ஒன்பதரை மணிக்குத் துவங்கி, பனிரெண்டரை மணி வரை இடைவெளி இன்றி ஆலோசனை அரங்கம் நடைபெறும். அரங்கில் அடையாறு ஆனந்த பவன் ஓட்டலின் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறைந்த இருக்கைகளே அனுமதிக்கப்படுகிறது. எனவே, இதில் பங்கேற்போருக்கு நிகழ்ச்சியின் முழு பலனும் கிடைக்கும் என்பது உறுதி.
‘மலை என்பது மிகப் பெரிய கல். அதேபோன்று, கல் என்பது சிறிய மலை!’ என்பதை பகுத்து உணரத் தெரிந்து கொண்டால், வாழ்க்கையில் வெற்றி எப்போதும் சாத்தியம். இதை உணர்ந்து கொள்ளும் பக்குவத்தை இதுபோன்ற பயிற்சி அரங்கில் மட்டுமே பெற முடியும். அடுத்தவர் அனுபவம் என்பது நமக்கு எளிதாகக் கிடைக்கும் வெற்றிப்படி அல்ல... எஸ்கலேட்டர்!
‘கனவு மெய்ப்பட..!’ முதல் பயிற்சி அரங்கம் வருகிற 16 ஆம் தேதி (சனிக்கிழமை) சென்னை அடையாறில் உள்ள திருவாடுதுறை ராஜரத்தினம் அரங்கில் நடைபெற உள்ளது.
இந்த அரங்கம் குறித்த விவரங்கள் மற்றும் முன்பதிவுக்கு 7338863608 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
இந்த புதுமையான பயிற்சி அரங்குக்கு வாருங்கள். உங்கள் கனவையும் மெய்யாக்குங்கள்!